எனக்கு தொியாமல் எதுவும் நடக்க கூடாது..! அங்கஐன் இராமநாதனின் கடிதம் சிங்கள மொழிபெயர்ப்புடன் ஜனாதிபதி, பிரதமரின் கவனத்திற்கு, கடுப்பானாராம் டக்ளஸ்..

ஆசிரியர் - Editor I

யாழ்.மாவட்டத்தில் தமக்கு தொியாமல் எந்தவொரு அபிவிருத்தி திட்டங்களும் நடைமுறைப்படுத்தப்படகூடாது. யாழ்.மாவட்டச் செயலருக்கு நாடாளுமன்ற உறுப்பினரும், மாவட்ட அபிவிருத்தி குழு தலைவருமான அங்கஜன் இராமநாதன் எழுதிய கடிதத்தை ஜனாதிபதி, பிரதமரின் கவனத்திற்கு கொண்டு செல்ல அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை எடுத்துள்ளார். 

மேற்படி கடிதத்தை சிங்கள மொழி பெயர்ப்பு செய்து ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு அனுப்ப அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நடவடிக்கை எடுத்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இது குறித்து மேலும் தொியவருவதாவது, யாழ். மாவட்ட அபிவிருத்தி குழுவின் இணைத் தலைவரான அங்கஜன் இராமநாதனால் 

2020-08-18 திகதியிடப்பட்ட கடிதம் மூலம் யாழ்.மாவட்டச் செயலாளரான கனபதிப்பிள்ளை மகேசனிற்கு அனுப்பி வைத்த கடிதமே அமைச்சரை சினம்கொள்ள வைத்துள்ளதுடன், இவ்வாறு மொழி பெயர்ப்புடன் ஜனாதிபதி மற்றும் பிரதமரின் கவனத்திற்கு அவசரமாக அனுப்பி வைக்கப்படுகின்றது.

குறித்த கடிதத்தில் கோட்டபாய ராஜபக்ஸ ஜனாதிபதியாக வந்த பின்னர் கொண்டுவரப்பட்ட திட்டங்கள் அனைத்தும் மக்கள் மயப்படுத்தப்படும்போது எனது தலமையின் கீழ் நடைபெறுவதற்கு ஏற்பாடு செய்து இதனை சகல பிரதேச செயலாளருக்கும் அறிவிப்பதோடு திட்டங்களின் விபரங்களை சமர்ப்பிக்க வேண்டும் எனவும்.

அனைத்து அமைச்சுக்களின் , அமைச்சர்களின் , அமைச்சுக்களின் செயலாளர்களின் , திணைக்களங்களின் ஊடாக யாழ்.மாவட்டத்தில் அபிவிருத்தியை அல்லது செயல் திட்டங்களை எனக்கு தெரியாமல் எந்தவொரு அமைச்சுக்களின் ஊடாகவும் யாழ். மாவட்டத்தில் மாவட்டச் செயலகம் , மாவட்டச் செயலாளர் உடன் 

அல்லது பிரதேச செயலாளர் உடன் தொடர்பு கொண்டு அபிவிருத்தி ஒருங்கிணைப்பு தலைவராகிய எனது அனுமதி இல்லாமல் செயல் திட்டங்களை நடைமுறைப் படுத்த வேண்டாம். ஆகிய இரு விடயங்கள் தொடர்பிலேயே உடனடியாக சிங்கள மொழி பெயர்ப்பு செய்யப்பட்ட கடிதத்தினை அனுப்பி தனது அதிருப்தியினையும் தெரிவிக்கின்றார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு