வாள்வெட்டு குழுவை சேர்ந்த 6 பேர் போதைப் பொருளுடன் யாழ்.பொலிஸாரால் கைது..! ஆவா குழு உறுப்பினர்கள் என்கிறது பொலிஸ்..

ஆசிரியர் - Editor I

யாழ்.மாவட்டத்தில் பல வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் 6 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், வர்களிடம் இருந்து 60 கிராம் ஹெரோயின் போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் போலீசார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வாள்வெட்டு குழுவை சேர்ந்த சந்தேக நபர்கள் என்ற குற்றச்சாட்டில் 6 பேரை போலீசார் இன்று காலை கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் ஆவா குழுவை சேர்ந்தவர்கள் எனவும் அவர்களிடமிருந்து

60 கிராம் ஹெரோயின் போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு