யாழ்.கச்சாய், கொடிகாமம், விடத்தல்பளை, வரணி பகுதிகளில் தொடர் கொள்ளை..! பிரபல கள்ளனை மடக்கியது கொடிகாமம் பொலிஸ்..
யாழ்.தென்மராட்சி பகுதியில் வீதியால் பயணிக்கும் பெண்களிடம் தொடர்ச்சியாக சங்கலி அறுப்பில் ஈடுபட்ட கள்ளன் நேற்று பிற்பகல் 1 மணியளவில் கைது செய்யப்பட்டுள்ளான்.
கொடிகாமம் பொலிஸாரினால் குறித்த கள்ளன் கைது செய்யப்பட்டுள்ளான். கச்சாய், கொடிகாமம், வரணி, விடத்தல்பளை உள்ளிட்ட பகுதிகளில் இடம்பெற்ற சங்கலி அறுப்பு கொள்ளையுடன் இவனுக்கு தொடர்புள்ளதாக கூறப்படுகிறது.
கொடிகாமம் பகுதியில் மறைந்திருந்த நிலையில் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து பொலிஸார் நடத்திய சுற்றிவளைப்பின்போதே குறித்த கள்ளன் கைது செய்யப்பட்டுள்ளான்.