யாழ்.நுணாவிலில் 5 மாத குழந்தை உயிரிழப்பு..! ஏணையில் போட்டு ஆட்டும்போது தலை சுவரில் மோதியதற்காக சிகிச்சை பெற்று வீடு திரும்பிய பின் சம்பவம்..

ஆசிரியர் - Editor I

யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று திரும்பிய 5 மாதக் குழந்தை திடீர் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட நிலையில் இன்று அதிகாலை உயிரிழந்திருக்கின்றது. 

யாழ்.தென்மராட்சி- நுணாவில் பகுதியில் இடம்பெற்றுள்ள குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது, கடந்த 19ம் திகதி குழந்தையை ஏணையில்போட்டு ஆட்டும்போது குழந்தையின் தலை சுவரில் தவறுதலாக மோதியுள்ளது. 

இதனையடுத்து குழந்தை யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வீடு திரும்பிய 2 நாட்களின் பின்னர் குழந்தை திடீர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளது. 

இதனையடுத்து குழந்தையை தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதித்த நிலையில் இன்று அதிகாலை குழந்தை உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது. 

சம்பவத்தில் நுணாவில் வைரவர் கோவிலடியை சேர்ந்த யோ.கிசோபன் என்ற 5 மாத குழந்தையே உயிரிழந்துள்ளது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு