சில மணிநேரத்தில் மின் விநியோகம் வழமைக்கு திரும்புமாம்..! 75 வீதமான பகுதிகளில் மின் விநியோகம் வழமைக்கு திரும்பியது..

ஆசிரியர் - Editor I
சில மணிநேரத்தில் மின் விநியோகம் வழமைக்கு திரும்புமாம்..! 75 வீதமான பகுதிகளில் மின் விநியோகம் வழமைக்கு திரும்பியது..

இலங்கை 75 வீதமான பகுதிகளில் மின் விநியோகம் வழமைக்கு திரும்பியுள்ளதாக அறிவித்திருக்கும் இலங்கை மின்சாரசபை தவிசாளர், மீதமான பகுதிகளுக்கு விரைவில் மின் விநியோகம் சீராக்கப்படும் என கூறியுள்ளார்.

இன்று இரவு 7 மணிவரைக்கும் மேற்கொள்ளப்பட்ட திருத்த வேலைகளின் ஊடாகவே நாட்டின் 75 வீதமான பகுதிகளுக்கான மின் விநியோகம் வழமைக்கு திரும்பவைக்கப்பட்டுள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஏனைய 25 சதவீத பணிகள் சில மணித்தியாலங்களில் சீர்செய்யப்பட்டு நாடுமுழுவதும் மின் விநியோகம் வழமைக்குத் திரும்பும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கேரவலபிட்டி மின் விநியோக நிலையத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காராணமாக நாடுமுழுவதும் இன்று நண்பகல் 12.35 மணி தொடக்கம் திடீர் மின் தடை ஏற்பட்டுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு