இந்தியாவிலிருந்து கடல்வழியாக யாழ்.மாவட்டத்திற்குள் நுழைய முயன்றபோது கைது செய்யப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டிருந்தவர் உயிரிழப்பு..!

ஆசிரியர் - Editor I
இந்தியாவிலிருந்து கடல்வழியாக யாழ்.மாவட்டத்திற்குள் நுழைய முயன்றபோது கைது செய்யப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டிருந்தவர் உயிரிழப்பு..!

தமிழகத்திலிருந்து காங்கேசன்துறை கடல்வழியாக யாழ்.மாவட்டத்திற்குள் நுழைய முயன்றபோது கைது செய்யப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டிருந்த ஒருவர் திடீர் சுகயீனம் காரணமாக உயிரிழந்துள்ளார். 

வல்வெட்டித்துறையை சேர்ந்த சத்தியமூர்த்தி பாலகிருஸ்ணன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். யாழ்.சிறைச்சாலையில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த குறித்த நபர் திடீர் சுகயீனமடைந்த நிலையில் 

யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிறுநீரக செயலிழப்பு காரணமாக இன்று உயிரிழந்துள்ளார். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு