போராளிகளை குறித்து பேசுவதற்கல்ல வாய் திறப்பதற்கே சீ.வி.விக்னேஷ்வரனுக்கு அருகதை இல்லை..! 5 வருடம் அவர் இருந்தது கதிரையில் அல்ல போராளிகளின் தியாகத்தில்..

ஆசிரியர் - Editor I

ஆயுதம் தாங்கி போராடியவர்கள் பெற்றுக் கொடுத்த மாகாணசபை கதிரையை 5 வருடங்களாக பிடித்துக் கொண்டிருந்து மக்களுக்கு ஒன்றுமே செய்யாத சீ.வி.விக்னேஷ்வரன், ஆயுத போராட்ட இயக்கங்களை சேர்ந்தவர்களுக்கு வாக்களிக்கவேண்டாம் என கூறுவதற்கு எந்தவொரு அருகதையும் அற்றவர். 

நான் சீ.வி.விக்னேஷ்வரனுக்கு சவால் விடுகிறேன். 12 மணிக்கு நித்திரைக்கு சென்று 4 மணிக்கு நித்திரையால் எழும்பியதை தவிர வேறு என்ன சாதித்தார்? அதனை கூற முடியுமா?  இரணைமடு, சுன்னாகம் நிலத்தடி நீர், நெல்சிப் என பல ஊழல் மோசடிகளுக்கு என்ன நடவடிக்கை எடுத்தார்? என்ன எடுக்க முடிந்தது?

மேற்கண்டவாறு ஐக்கிய மக்கள் சக்தியின் யாழ்.தேர்தல் மாவட்ட தலமை வேட்பாளர் கணேஷ் வேலாயுதம் கேள்வி எழுப்பியிருக்கின்றார். குறித்த விடயம் தொடர்பாக இன்று யாழ்.ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தொிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். 

இதன்போது மேலும் அவர் கூறுகையில், சீ.வி.விக்னேஷ்வரன் ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே ஆயுத போராட்ட வழியில் இருந்து வந்தவர்களுக்கு, அரச கட்சிகளுக்கும் மக்கள் ஆதரவளிக்கவேண்டாம் என கூறியிருக்கின்றார். அவருடைய கட்சியிலேயே ஆயுத போராட்டம் சார்ந்த 4 பேர் இருக்கையில் அவர் இப்படி கூறுகிறார். 

ஆகவே உட்கட்சிக்குள் முறுகல் இருப்பதை அவரே அம்பலப்படுத்துகிறார். இதே விக்னேஷ்வரன்  5 வருடங்கள் இருந்த மாகாணசபை கதிரை ஆயுதம் தாங்கி போராடியவர்களால் கிடைத்தது. அதையும் ஒழுங்காக பயன்படுத்த தொியாமல் கவிழ்த்து கொட்டியதே மிச்சம். இதே முதலமைச்சர் மாகாணசபையை பொறுப்பேற்கும்போது 

6வது இடத்திலிருந்த மாகாணத்தின் கல்வி இவர் பதவியேற்றதன் பின்னர் எங்கே சென்றது என்பது அனைவருக்கும் தொியும். இவருக்கு ஆயுத போராட்ட வழியில் இருந்து வந்தவர்களை குறித்து பேசுவதற்கு என்ன அருகதை உள்ளது? 1983 காலப்பகுதியில் நாங்கள் ஆயுதமேந்தி போராடியபோது அப்போதைய பிரதமர் ரணசிங்க பிறேமதாஸவுக்காக மேடை ஏறியவர் இவர்

2009ம் ஆண்டு இனம் அழிக்கப்பட்டபோது எங்கே இருந்தவர்? எனக்கு தொிந்த தமிழ் அரசியல் கைதிகள் சொல்வார்கள் இவர் நீதிமன்றுக்கு வந்துவிடக்கூடாது. சிங்கள நீதிபதிகள் வரவேண்டும் என தாங்கள் கும்பிடவார்களாம். அந்தளவுக்கு கடமையான தண்டணைகளை கொடுப்பவராம். மேலும் அவரே கூறுகிறார் 2013ம் ஆண்டு கனடாவுக்கு வீசா கிடைத்திருந்தால்

தான் கனடாவுக்கு சென்றிருப்பேன் என. மேலும் மாகாணசபை ஆட்சியில் 4வது வருடத்தில் பிரச்சினை கிளம்பியபோது இவர் ஒழுங்கான ஆளாக இருந்திருந்தால் பதவியை துாக்கி வீசிவிட்டு சென்றிருப்பார். ஆனால் 5 வருடங்களும் கதிரை ஆசையில் ஆட்சியை பிடித்துவைத்திருந்தவர் இப்போது தனக்கு 5 வருடங்கள் கேட்கிறார். 

எமக்கெல்லாம் மக்கள் ஒருமுறை தந்தால்போதும் அடுத்தமுறை மக்களிடம் கேட்கமாட்டோம் மக்களே தருவார்கள் அந்தளவுக்கு வேலை செய்வோம். இவர்கள் ஒன்றையும் செய்யாமல், ஆயுத போராட்டத்தை கொச்சைப்படுத்துவதாக கூறிக்கொண்டு தமிழர்களை கொச்சைப்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள். நான் இங்கு பேசியதற்காவது 

சீ.வி.விக்னேஸ்வரன பதிலளிக்கவேண்டும். அதை நான் எதிர்பார்கிறேன் என்றார். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு