யாழ்.கற்கடதீவை சுற்றிவளைத்த கடற்படை..! இந்தியா- கேரள படகு கைப்பற்றப்பட்டது, இரு கடத்தல்காரர்கள் கைது..

ஆசிரியர் - Editor I
யாழ்.கற்கடதீவை சுற்றிவளைத்த கடற்படை..! இந்தியா- கேரள படகு கைப்பற்றப்பட்டது, இரு கடத்தல்காரர்கள் கைது..

யாழ்.கற்கடதீவில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த 6 மில்லியன் பெறுமதியான 58 கிலோ கஞ்சா மீட்கப்பட்டுள்ளதுடன், கடத்தல்காரர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

கடற்படையினர் நடாத்திய அதிரடி சோதனையின்போதே இவர்கள் கைது செய்யப்பட்டிருப்பதுடன், இந்தியா- கேரளாவை சேர்ந்த டிங்கி படகு ஒன்றும் கைப்பற்றப்பட்டது. 

மேலும் கைது செய்யப்பட்டவர்கள் இந்தியர்களா? இலங்கையர்களா? என்பது தொடர்பான தகவல்கள் எமக்கு கிடைக்கவில்லை. 

இந்நிலையில் கைது செய்யப்பட்டவர்கள் மேலதிக விசாரணைக்காக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கின்றனர். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு