புகைரதம் மோதி படுகாயமடைந்த மாடு..! ஜீவகாருண்யம் மிக்கவர்களால் மீட்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டது..
யாழ்.புகைரத நிலையத்திலிருந்து காங்கேசன்துறை சென்ற புகைரதத்தில் மோதி உயிருக்கு போராடிய பசு மாடு மக்களால் மீட்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டுள்ளது.
நாவலர் வீதி பகுதியில் நேற்றிரவு ரயில் பாதையில் நின்ற இரு பசு மாடுகள் மீது ரயில் மோதியது. இதன்போது ஒரு மாடு இறந்ததுடன், மற்றொரு மாடு காயமடைந்த நிலையில்,
நேற்றிரவு தொடக்கம் எழுந்து நடக்க முடியாத நிலையில் அங்கேயே கிடந்துள்ளது. காயமடைந்து நடக்க முடியாத நிலையில் கிடந்த மாடினை அப்பகுதி மக்கள் மற்றும்
யாழ்.மாநகரசபை உறுப்பினர் வ.பார்த்தீபன் மற்றும் கால்நடை வைத்தியர்கள் இணைந்து மீட்டு மாட்டிற்க்கு சிகிச்சை வழங்கும் நடவடிக்கை தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.