இடைநிறுத்தப்பட்ட நியமனத்தை வழங்கக் கோரும் பட்டதாரிகள்!
தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ள பயிலுனர் செயற்திட்ட உதவியாளர் நியமனத்தை மீள வழங்குமாறு கோரி ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவுக்கு, யாழ். அரச அதிபர் ஊடாக இன்று மகஜர் கையளிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தை சேர்ந்த பயிலுனர் செயற்திட்ட உதவியாளர்கள் ஒன்று கூடி ஜனாதிபதிக்கான மகஜரை அரச அதிபரிடம் கையளித்தனர். குறித்த மகஜரை பெற்றுக்கொண்ட அரச அதிபர் இதனை உரிய முறையில் ஜனாதிபதிக்கு அனுப்பி வைப்பதாக செயற்திட்ட உதவியாளர்களிடம் உறுதியளித்தார்.