யாழ்.எழுதுமட்டுவாழ் பகுதியில் 13 வயது சிறுமி துஷ்பிரயோகம்..! 19 வயது இளைஞன் கைது..

ஆசிரியர் - Editor I
யாழ்.எழுதுமட்டுவாழ் பகுதியில் 13 வயது சிறுமி துஷ்பிரயோகம்..! 19 வயது இளைஞன் கைது..

யாழ்.எழுதுமட்டாவாழ் பகுதியில் 13 வயதான சிறுமி மீது துஷ்பிரயோகம் புரிந்த குற்றச்சாட்டில் 19 வயதான இளைஞன் இன்று மாலை கைது செய்யப்பட்டுள்ளான்.

எழுதுமட்டுவாழ் பகுதியை சேர்ந்த 19 வயதுடைய இளைஞர் ஒருவரே குறித்த குற்றச்சாட்டில் கொடிகாமம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

குறித்த சிறுமியை அவரது பெற்றோர் மருத்துவ பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில், 

வைத்தியசாலை தரப்பினரால் கொடிகாமம் பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த இளைஞருக்கும் சிறுமிக்கும் இடையில் காதல் தொடர்பு இருந்ததாகவும், இதனைப்பயன்படுத்தி சிறுமியை தனியே அழைத்துச் சென்ற இளைஞன் பாலியல் துஷ்பிரயோகத்தை புரிந்ததாக விசாரணைகளில் தெரியவந்தது என்று பொலிஸ் தரப்பால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு