ஈ.பி.டி.பி வேட்பாளர் நடத்திய பிரச்சார கூட்டத்தில் கலந்துகொண்ட 10 இளைஞர்கள் கைது..! நழுவிய வேட்பாளர்..

ஆசிரியர் - Editor I
ஈ.பி.டி.பி வேட்பாளர் நடத்திய பிரச்சார கூட்டத்தில் கலந்துகொண்ட 10 இளைஞர்கள் கைது..! நழுவிய வேட்பாளர்..

யாழ்.நல்லூர் பகுதியில் ஈ.பி.டி.பி வேட்பாளர் நடத்திய தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டிருந்த 10 இளைஞர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் வேட்பாளர் அங்கிருந்து நழுவியுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் இன்று மாலை பல இளைஞர்களை அழைத்து குறித்த வேட்பாளர் கலந்துரையாடல் ஒன்றை நடத்தியுள்ளார்.

இதன்போது சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கலந்துரையாடலில் கலந்துகொண்ட 10 இளைஞர்களை கைது செய்துள்ளனர்.

போலீசார் கைது செய்த்தை அடுத்து சம்பவ இடத்தை விட்ட. வேட்பாளர் நாசுக்காக  விலகிச் சென்றுள்ளார்.

சுகாதார முறைகளை பின்பற்றாதாதாலேயே குறித்த இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தரப்பு தகவல்கள் தெரிவித்து உள்ளன.

இந்த சம்பவம் தொடர்பில் குறித்த பாராளுமன்ற தேர்தல் வேட்பாளர் தொடர்பு கொண்டபோதும் தொடர்பு கொள்ள முடியவில்லை.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு