கதிரையில் இருந்து தவறி விழுந்த 3 வயது சிறுவன்..! பெற்றோரின் கவனயீனம் 5 நாட்களின் பின் சிறுவன் உயிரிழப்பு, யாழ்.பருத்துறையில் சம்பவம்..

ஆசிரியர் - Editor I
கதிரையில் இருந்து தவறி விழுந்த 3 வயது சிறுவன்..! பெற்றோரின் கவனயீனம் 5 நாட்களின் பின் சிறுவன் உயிரிழப்பு, யாழ்.பருத்துறையில் சம்பவம்..

யாழ்.பருத்துறை- அல்வாய் பகுதியில் வீட்டில் கதிரையில் இருந்து விழுந்த சிறுவன் தொடர்பாக பெற்றோர் கவனிக்காமல் விட்ட நிலையில் சிறுவன் உயிரிழந்துள்ளான். 

ஜெபநேசன் சியோன் (வயது3) என்ற சிறுவன் கடந்த 5 நாட்களுக்கு முன்னர் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தபோது கதிரையிலிருந்து தவறி விழுந்துள்ளான். 

இதனை பெற்றோர் பொிதுபடுத்தாத நிலையில், நேற்றய தினம் தலைப் பகுதி வீங்கி காதுப்பகுதிகள் வலிப்பதாக தனது பெற்றோரிடம் தெரிவித்தான்.

இதையடுத்து சிறுவனின் தலைப்பகுதியை அவதானித்தனர், அத்துடன் சிறுவனுக்கு காய்ச்சலும் இருந்துள்ளது. இதனால் பெற்றோர் நேற்று மதியம் 

மந்திகை ஆதார வைத்தியசாலையில் சிறுவனை சேர்த்தனர்.அங்கு அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட சிறுவன் மேலதிக சிகிச்சைக்காக 

யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு