யாழ்.மாவட்டத்திற்குள் தென்னிலங்கை மீனவர்கள் அத்துமீறலுக்கு எதிராக கிளர்ந்தெழுந்த மக்கள்..!
யாழ்.வடமராட்சி கிழக்கு பகுதியில் தென்னிலங்கை மீனவர்களின் அத்துமீறல்கள், கடலட்டை தொழில் ஆகியவற்றை நிறுத்தக்கோரி மக்கள் கிளர்ந்தெழுந்து போராட்டம் நடத்தியுள்ளனர்.
இன்று காலை மருதங்கேணி பிரதேச செயலகம் முன்பாக இந்த கவனயீர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டது.