காற்றினால் துாக்கி வீசப்பட்ட முதியவர் பலி..! மோட்டார் சைக்கிளில் மகனுடன் சென்றவேளை நடந்த விபரீதம்..

ஆசிரியர் - Editor I
காற்றினால் துாக்கி வீசப்பட்ட முதியவர் பலி..! மோட்டார் சைக்கிளில் மகனுடன் சென்றவேளை நடந்த விபரீதம்..

யாழ்.கோப்பாய் பகுதியில் காற்றினால் துாக்கி வீசப்பட்ட முதியவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 

கடந்த வெள்ளிக்கிழமை தனது மகனுடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த நிலையில் பக்கவாட்டிலிருந்து வீசிய காற்றினால் முதியவர் துாக்கி வீசப்பட்டு

கோப்பாய் பாலத்தின் இரும்பு சட்டங்கள் மீது மோதி படுகாயமடைந்துள்ளார். பின்னர் வீதியால் பயணித்தவர்களால் காப்பாற்றப்பட்டு யாழ்.போதனா வைத்தியசாலையில் முதியவர் அனுமதிக்கப்பட்டார்.

எனினும் முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் உயிரிழந்தவர் கோப்பாய் தெற்கை சேர்ந்த சந்திரசேகர் சரவணமுத்து (வயது80) என அடையாளம் காணப்பட்டார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு