இரு ரவுடி குழுக்களுக்கிடையில் மோதல்..! 3 பேர் படுகாயம், இருவர் ஆபத்தான நிலையில், யாழ்.மாவட்டத்தில் தொடரும் அடாவடி..
யாழ்.வடமராட்சி கிழக்கு- குடத்தனை பகுதியில் இரு ரவுடி கும்பல்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் 3 பேர் காயமடைந்துள்ளனர்.
குடத்தனை கிழக்கு குலான் பகுதியில் இன்று மாலை இடம்பெற்றுள்ளது. இரண்டு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதல் சம்பவத்திலேயே
குறித்த மூவரும் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.படுகாயம் அடைந்த மூவரில் இருவரின் நிலை ஆபத்தாகக் காணப்படுவதாக கூறப்படுகிறது.
படுகாயம் அடைந்தவர்கள் நோயாளர் காவு வண்டி மூலம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
வடமராட்சி கிழக்குப்பகுதி மக்களை கடும் பதற்றத்திற்குள்ளாகியுள்ள இச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.