யாழ்.மாவட்ட மக்களே அவதானம்..! வேகமாக பரவும் காசநோய், 90 பேர் அடையாளம் காணப்பட்டனர்..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்ட மக்களே அவதானம்..! வேகமாக பரவும் காசநோய், 90 பேர் அடையாளம் காணப்பட்டனர்..

யாழ்.மாவட்டத்தில் கொரோனா தாக்கம் படிப்படியாக குறைந்துள்ள நிலையில் தற்போது காச நோயின் தாக்கம் வேகமாக பரவிவருவதாக யாழ்.போதனா வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளர் வைத்தியர் யமுனானந்தா கூறியுள்ளார். 

இந்த நோய்த் தொற்றுடையவர்கள் 90 பேர் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்பதுடன், மேலும் 20 நோயாளர்கள் சமூகத்துடன் இணைந்துள்ளார்கள் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள அவர், கொரோனா வைரஸ் பரவல் என்பது இலங்கையில் குறைந்தளவே காணப்படுகின்றது. இருப்பினும் பல்வேறு நாடுகளில் இவ்வைரஸின் தாக்கம் பெரிதளவில் காணப்படுகின்றது.

உலகளாவிய ரீதியில் 3 தொற்று நோய்கள் பெரும் பாதிப்பினை ஏற்படுத்தி வருகின்றன. குறிப்பாக கொரோனா, காச நோய் மற்றும் எயிட்ஸ் நோய்களே இவ்வாறு அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகின்றன.

கொரோனா நோய் தொற்று அல்லது பரவல் தொடர்பாக பொது மக்களிடையே போதிய விழிப்புணர்வு உள்ளதால், அந்த நோய் பரவலை சிறப்பான முறையில் கட்டுப்படுத்தக்கூடியவாறு உள்ளது.

ஆனால் கொரோனா அறிகுறி போன்று இருமல் உள்ளவர்களிடம் இருந்து காச நோய் வேறு பலருக்கு பரவக்கூடிய அபாயம் உள்ளது. காச நோயும் கொரோனா போன்று மக்கள் விழிப்புணர்வுடன் இருந்து கட்டுப்படுத்த வேண்டிய ஒரு 

கொடிய நோயாகும். கடந்த 3 நூற்றாண்டு காலமாக உலகெங்கும் காச நோய் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றது. 2018 ஆம் ஆண்டு 1.2 மில்லியன் மக்கள் காச நோயால் உயிரிழந்துள்ளார்கள். மேலும் 1.1 மில்லின் சிறுவர்கள் 

காச நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.உலகளாவிய ரீதியில் 2020ஆம் ஆண்டு தொடக்கும் 2021ஆம் ஆண்டுகளில் 10 மில்லியன் மக்கள் காச நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 3 மில்லியன் மக்கள் 

தாங்கள் காச நோயால் பாதிக்கப்பட்டுள்ளதை அறியாமலே அந்த நோயுடன் வாழ்ந்தவர்கள்.மேலும் ஒரு மில்லியன் மக்கள் எதிர்வரும் ஒரு வருடத்தில் உயிரிழக்க வேண்டி நேரிடலாம். எனவே காச நோய் தொடர்பான விழிப்புணர்வும் 

அதற்கான சிகிச்சையும் மிகவும் இன்றியமையாதது.குறிப்பாக யாழ்ப்பாணத்தில் இவ்வருடத்தில் இன்றுவரை 90 காச நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். அவர்களுக்கு சிகிச்சை வழங்கப்பட்டுகின்றது. 

மேலும் 20 காச நோயாளர்கள் இன்னமும் இனங்காணப்படாமல் சமூகத்தில் உள்ளளர்.கொரோனா வைரஸ் தொற்று பரவலால் மேற்கொள்ளப்பட்டுவரும் சிறப்பு நடவடிக்கைகள் காரணமாக காச நோயாளர்களை

இனங்காணப்படுவதில் தடை ஏற்பட்டுள்ளது. கொரோனாவால் ஏற்படுத்தப்படும் வறுமையும் காச நோய் பெருக்கத்தை ஏற்படுத்தும்.இருவாரமாக தொடர் இருமல், மாலை வேளைகளில் காய்ச்சல், நெஞ்சு வலி, உடல் மெலிவு, 

உணவில் விருப்பமின்மை, சளியுடன் குருதி வெளியேறுதல் போன்ற அறிகுறி உள்ளவர்கள் அருகில் உள்ள வைத்தியசாலைக்கு சென்று சளிப்பரிசோதனை செய்ய வேண்டும்.காச நோய்க்கு உள்ளான ஒருவருக்கு 

6 மாத தொடர் சிகிச்சை மூலமாக அவரை முழுமையாக குணப்படுத்திக்கொள்ளலாம் எனவே இதை கண்டு அஞ்சத் தேவையில்லை என மேலும் தெரிவித்துள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு