யாழ்.விடத்தல்பளையில் தங்கவைக்கப்பட்டிருந்த ஒருவருக்கு கொரோனா உறுதி..! பணிப்பாளர் தகவல்..
யாழ்.விடத்தல்பளை தனிமைப்படுத்தல் நிலையத்தில் உள்ள ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இன்று 20பேருக்கான பரிசோதனைகள் யாழ் போதனா வைத்தியசாலை ஆய்வு கூடத்தில் மேற்கொள்ளப்பட்டன.
இதன்போதே தொற்றுக்குள்ளான ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்
பரிசோதனைக்குட்பட்டவர்களின் விபரங்கள்:
போதனா வைத்தியசாலை விடுதிகளில் அனுமதிக்கப்பட்டவர்கள் - 3 பேர்.
போதனா வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவில் பரிசோதிக்கப்பட்டவர்கள் - 4 பேர்.
பொது வைத்தியசாலை வவுனியா - ஒருவர்.
மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலக பிரிவு -11 பேர்.
தனிமைப்படுத்தல் மையம் விடத்தைபளை - ஒருவர். ( தொற்று உறுதிசெய்யப்பட்ட வர்)