யாழ்.மாவட்டத்தில் மாதிரி தேர்தல் நிறைவு..! சுகாதார நடைமுறைகளை பேணி மக்கள் வாக்களிப்பு..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தில் மாதிரி தேர்தல் நிறைவு..! சுகாதார நடைமுறைகளை பேணி மக்கள் வாக்களிப்பு..

யாழ்.மாவட்டத்தில் மாதிரி தேர்தல் இன்று யாழ்.நாவாந்துறை றோமன் கத்தோலிக்க வித்தியாலயத்தில் காலை 10 மணி தொடக்கம் 12 மணிவரை இடம்பெற்றது. 

இதன்போது சமுக இடைவெளியை பேணப்பட்டு, கைகள் சுத்தம் செய்யப்பட்டு வாக்காளர்கள் வாக்களிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

இந்த தேர்தல் ஒத்திகையின் போது தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன்ஸ்ரீ ரத்னாயக, யாழ் மாவட்ட தேர்தல் அத்தியட்சகர் க.மகேசன்,

யாழ்.மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் இ.அமல்ராஜ் , யாழ்ப்பாணம் பிரதேச செயலாளர் எஸ்.சுதர்சன், காவல்துறையினர், சுகாதார துறை உத்தியோகத்தர்கள், 

மாவட்ட செயலக மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் என பலர் கலந்துகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு