யாழ்.தேர்தல் மாவட்டத்தில் 8 முறைப்பாடுகள் இதுவரை பதிவு..! ஆராய்கிறது தேர்தல் ஆணைக்குழு..
யாழ்.மாவட்டத்தில் இதுவரை 8 தேர்தல் முறைகேடுகள் தொடர்பான முறைப்பாடுகள் கிடைத்திருப்பதாக மாவட்ட தேர்தல் தொிவத்தாட்சி அலுவலக தகவல்கள் தொிவிக்கின்றன.
2020ஆம் ஆண்டிற்கான நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பில் இதுவரை யாழ்ப்பாணம் மாவட்டத்தில் மட்டும் 8 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.
அவ்வாறு கிடைக்கப்பெற்ற அனைத்து முறைப்பாடுகளுமே விதிமுறை மீறல் தொடர்பான முறைப்பாடுகளாகவே கானப்படுகின்றன. இதேநேரம் வன்முறை தொடர்பில்
எந்தவொரு முறைப்பாடும் கிடைக்கவில்லை. இந்த நிலையில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு ஆராய்குன்றது. எனத் தெரிவித்தனர்.