யாழ்.மாவட்டத்தின் பல பகுதிகளில் நாளை மின்தடை..!

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தின் பல பகுதிகளில் நாளை மின்தடை..!

மின் இணைப்பு திருத்த பணிகள் மற்றும் பராமரிப்பு பணிகளுக்காக யாழ்.மாவட்டத்தின் பல பகுதிகளில் நாளை மின்சாரம் தடை செய்யப்படும் என இலங்கை மின்சாரசபையின் வடமாகாண பிரதி பொதுமுகாமையாளர் கூறியுள்ளார்.

இதன்படி, நாளை காலை-08.30 மணி முதல் மாலை-05 மணி வரை யாழ்.ஆஸ்பத்திரி வீதியில் வேம்படிச் சந்தியிலிருந்து கஸ்தூரியார் வீதிச் சந்தி வரை, மகாத்மா வீதி, முனீஸ்வரன் வீதி, கந்தப்பசேகரம் வீதி, யாழ்.போதனா வைத்தியசாலை, 

யாழ். போதனா வைத்தியசாலையின் மூன்று மாடிக் கட்டடத் தொகுதி, கொமர்சல் வங்கி, தேசிய சேமிப்பு வங்கி, இலங்கை வங்கி, ரில்கோ விடுதி, சுகாதார சேவை நிலையம், யாழ்ப்பாணம் பல்கலைக்கழக ஆண்கள் விடுதி, 

யாழ்ப்பாணம் கார்கில்ஸ் பி.எல். சி, அபி கட்டடம், லங்கா ஒறிக்ஸ் லீசிங் கொம்பனி பி.எல்.சி, யாழ். ஹோட்டல் பிறைவேற் லிமிற்ரெட், யாழ். மதர் கெயார் பிறைவேற் லிமிற்ரெட்,சாவகச்சேரி தபாலக வீதி, கண்டுவில் டச்சு வீதி, 

அரசடி ஆசிரியர் வீதி, பெருங்குளம் சந்தி, 190 ஆவது மைல்கல் ஏ-9 வீதி, நுணாவில் வைரவர் கோவில் பிரதேசம், கல்வயல் துர்க்கை அம்மன் கோவில் சந்தி, சாவகச்சேரி புகையிரத நிலையம், சாவகச்சேரி நகரம், சாவகச்சேரி வைத்தியசாலைப் பிரதேசம், 

சாவகச்சேரி நீதிமன்றப் பிரதேசம், அரசடி, கச்சாய் வீதி, சங்கத்தானை, மீனாட்சியம்மன் கோவில் ஆகிய பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டிருக்குமெனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு