யாழ்.வல்லை படைமுகாமில் குண்டுவெடிப்பா..? நடக்கவில்லை என்கிறது இராணுவ தரப்பு, நடந்ததாக அறிந்தோம் என்கிறது பொலிஸ் தரப்பு. உண்மை என்ன..?

ஆசிரியர் - Editor I
யாழ்.வல்லை படைமுகாமில் குண்டுவெடிப்பா..? நடக்கவில்லை என்கிறது இராணுவ தரப்பு, நடந்ததாக அறிந்தோம் என்கிறது பொலிஸ் தரப்பு. உண்மை என்ன..?

யாழ்.வல்லை படைமுகாமிற்கு அருகில் குண்டு வெடித்ததாகவும் குறித்த வெடிப்பு சம்பவத்தில் படை அதிகாரி ஒருவர் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது. 

படைமுகாமில் பணியாற்றும் அதிகாரி ஒருவரும் சிப்பாய் ஒருவரும் நேற்று மாலை நடை பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது அந்த பகுதி ஊடாக மோட்டார் சைக்கிளில் பயணித்தவர்கள்

விழுத்திவிட்டு சென்ற பொதி ஒன்றை எடுத்து இராணுவத்தினர் பிரிக்க முயன்றபோது அது வெடித்ததாகவும், சம்பவத்தில் படை அதிகாரி காயமடைந்ததாகவும் கூறப்படுகின்றது. 

எனினும் அவ்வாறான சம்பவம் இடம்பெறவில்லை. என படையினர் தரப்பும், இல்லை ஒரு சம்பவம் நடந்ததாக அறிந்தோம் என பொலிஸ் தரப்பும் கூறுகின்றனர். 

சம்பவ இடத்திற்கு பொலிஸார் சென்றபோதும் படையினர் அவ்வாறான சம்பவம் எதுவும் நடக்கவில்லை. என கூறியதாக பொலிஸ் வட்டாரங்கள் கூறுகின்றன. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு