யாழ்.இணுவிலில் தங்கியிருந்த இந்திய வியாபாரி கொரோனா தொற்றுக்குள்ளானது எப்படி..? திணறுகிறோம், பணிப்பாளர் நாயகம் அதிர்ச்சி தகவல்..

ஆசிரியர் - Editor I
யாழ்.இணுவிலில் தங்கியிருந்த இந்திய வியாபாரி கொரோனா தொற்றுக்குள்ளானது எப்படி..? திணறுகிறோம், பணிப்பாளர் நாயகம் அதிர்ச்சி தகவல்..

யாழ்.இணுவில் பகுதியில் தங்கியிருந்த இந்திய புடவை வியாபாரி கொரோனா தொற்றுக்குள்ளானது எவ்வாறு என கண்டறிய முடியவில்லை. என சுகாதாரசேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜெயசிங்க கூறியிருக்கின்றார். 

இது குறித்து பணிப்பாளர் நாயகம் மேலும் கூறுகையில், குறித்த வியாபாரிக்கு எவ்வாறான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன? இலங்கையில் தொற்றுக்குள்ளானாரா? இந்தியாவில் தொற்றுக்குள்ளானாரா?

என்பன போன்ற தகவல்கள் இதுவரையில் எமக்கு கிடைக்கவில்லை. எனினும் அந்த தகவல்களை அறிந்து கொள்வதற்கான நடவடிக்கைகளை நாங்கள் தொடர்ச்சியாக மேற்கொண்டிருக்கின்றோம். என அவர் மேலும் கூறியுள்ளார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு