யாழ்.மாவட்ட மக்களின் உதவியை கோருகிறது இராணுவம்..! மக்களுக்கு நிறைய தகவல்கள் தொியும்..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்ட மக்களின் உதவியை கோருகிறது இராணுவம்..! மக்களுக்கு நிறைய தகவல்கள் தொியும்..

யாழ்.மாவட்டத்தில் சட்டவிரோத செயற்பாடுகளை தடுத்து நிறுத்துவதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பு நிச்சயமாக தேவைப்படுவதாக மாவட்ட பாதுகாப்பு படைகளின் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் ருவாண் வணிகசூரிய கூறியுள்ளார். 

இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். யாழ்ப்பாண குடாநாட்டை பொறுத்தவரைக்கும் 

சட்டவிரோதமான போதைப் பொருட்கள்விற்பனை செய்வோர் மற்றும் சட்டவிரோத செயலபாடுகள்இடம்பெற்று வருகின்றமை நாமறிந்த விடயம்தான் எனினும் இது தொடர்பில் போலீசாரால் துரிதமாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது. 

எனினும் போலீசார் எம்மிடம்உதவி கோரும் பட்சத்தில் நாங்கள் போலீசாருக்கும் உரிய உதவிகளை உரிய நேரத்தில் வழங்கி வருகின்றோம். எனினும் இந்த விடயங்கள் தொடர்பில் சாதாரண பொது மக்களுக்கு நிறைய தகவல்கள் தெரியும்.

சட்டவிரோதமான செயற்பாடுகளை நிறுத்த வேண்டுமேயானால் பொதுமக்கள் எங்களுக்கு உரிய தகவல்களை வழங்கும் இடத்தில் நாங்கள் அதனை போலீசாருடன் இணைந்து அதனைக் கட்டுப் பாட்டுக்குள் கொண்டுவர முடியும்.

சம்பந்தப்பட்டவர்களுக்குரிய நடவடிக்கையினையும் உடனடியாக நாங்கள் எடுக்க முடியும் எனவும் யாழ்.மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ருவான் வணிகசூரிய தெரிவித்தார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு