யாழ்.பருத்துறையில் வந்திறங்கிய சிங்கள மீனவர்களால் பதற்றம்..! கடற்றொழிலாளர் சங்கங்கள் மௌனம்..
யாழ்.பருத்துறை - கொட்டடி கடற்கரை பகுதியில் தென்னிலங்கை மீனவர்கள் ஒரு தொகுதியினர் வந்திறங்கியதால் அந்த பகுதியில் பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளது.
பொதுமக்கள் பொழுதுபோக்காக நேரத்தை கழிப்பதற்காக ஒதுக்கப்பட்டிருந்த குறித்த கடற்பரையில் எந்தவொரு அனுமதியும் பெறாமல் கடலட்டை பிடிப்பதற்காக
பெருளவு சிங்கள மீனவர்கள் வந்திறங்கியுள்ளதுடன், பூசை வழிபாடுகளை நடாத்தி தொழிலுக்கான ஆயத்த பணிகளை செய்துள்ளனர்.
இதனால் அப்பகுதி மக்கள் மற்றும் கடற்றொழிலாளர்கள் குழப்பமடைந்துள்ளபோதும் கடற்றொழிலாளர் சங்கங்கள் தொடர்ச்சியாக அமைதியாக இருந்துவருகின்றனர்.