5 மாதத்தில் 829 நோயாளர்கள், ஒரு இறப்பு..! மக்கள் அவதானமாக இருக்கவேண்டும் என்கிறார் யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர்..
யாழ்.போதனா வைத்தியசாலையில் இந்த வருடம் மட்டும் 829 பேர் டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும், ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி கூறியிருக்கின்றார்.
இதன்படி கடந்த மாதம் 61 நோயாளர்களும், கடந்த வாரம் 14 நோயாளர்களும் அடையாளம் காணப்பட்டிருக்கின்றனர். மக்கள் இந்த விடயத்தில் மிக அவதானமாக நடந்துகொள்ளவேண்டும். என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.