யாழ்.குரும்பசிட்டியை சேர்ந்தவர் கனடாவில் கொலை..!

ஆசிரியர் - Editor I
யாழ்.குரும்பசிட்டியை சேர்ந்தவர் கனடாவில் கொலை..!

யாழ்.குரும்பசிட்டி பகுதியை சேர்ந்த ஒருவர் கனடாவில் கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டிருக்கின்றார். 

கடந்த சனிக்கிழமை மார்க்கம் நகரில் 45 வயதான மதன் மகாலிங்கம் என்பவர் சடலமாக மீட்கப்பட்டார். இவரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அறிவித்த யோர்க் பிராந்திய பொலிஸார், 

அது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டனர். இந்நிலையில் அவர் கொலை செய்யப்பட்டதாக யோர்க் பொலிஸார் நேற்று அறிவித்துள்ளனர். 

கடந்த 6ஆம் திகதி ஸ் ரீலெஸ் வீதி கிழக்கு மர்ஹம் வீதி சந்திப்புக்கு அருகாமையில் மேரிடேல் வீதியில் உள்ள இல்லம் ஒன்றுக்கு வெளியில் கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு