யாழ்.அனலைதீவில் கடற்படை மீது தாக்குதல்..! 4 பேரை அதிரடியாக கைது செய்தது கடற்படை..

ஆசிரியர் - Editor I
யாழ்.அனலைதீவில் கடற்படை மீது தாக்குதல்..! 4 பேரை அதிரடியாக கைது செய்தது கடற்படை..

யாழ்.அனலைதீவு பகுதியில் கடற்படையினர் மீது தாக்குதல் நடாத்திய குற்றச்சாட்டில் 4 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். 

கடற்படை முகாமிற்குள் நுழைந்து தர்ப்பத்தில் ஈடுபட முயற்சித்தவர்கள் மீது கடற்படையினர் தாக்குதல் நடாத்தியிருந்தனர். 

குறித்த நபர்கள் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சென்றிருந்த நிலையில் அவர்களை பார்க்க சென்ற கடற்படையினர் வழிமறிக்கப்பட்டு 

கற்கள், போத்தல்களை கொண்டு தாக்குதல் நடாத்தப்பட்டிருந்தது. இந்த தாக்குதலில் இரு கடற்படையினர் காயமடைந்திருந்தனர். 

இதனையடுத்து தீவு முழுவதும் கடற்படையினால் முற்றுகையிடப்பட்டு தீவுக்குள் நுழைவதும், தீவிலிருந்து வெளியேறுவதும் தடுக்கப்பட்டு தேடுதல் நடத்தப்பட்டது. 

இந்நிலையில் கடற்படையினர் மீது தாக்குதல் நடாத்திய 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இந்த தாக்குதல் சம்பவத்தில் காயமடைந்த இரண்டு கடற்படை உறுப்பினர்களும் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு