யாழ்.ஆரியகுளம் நாக விகாரை மீது இன்று அதிகாலை விஷமிகள் தாக்குதல்..! பொலிஸ், இராணுவம் குவிப்பால் பதற்றம்..
யாழ்.ஆரியகுளம் நாக விகாரை மீது இனந்தெரியாத நபர்கள் இன்று அதிகாலை தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இதனையடுத்து நாக விகாரையை சூழவுள்ள பகுதிகளில் இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் குவிக்கப்பட்டு விசாரணை மேற்கொண்டனர்.
இந்த தாக்குதல் சம்பவத்தில் நாக விகாரையின் முகப்பில் உள்ள புத்தர் சிலையின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டுள்ளதுடன் புத்தர் சிலைக்கும்
சிறிய சேதம் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவத்தையடுத்து ஏராளமான இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் அப்பகுதியில் குவிக்கப்பட்டு
விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அத்துடன் விகாரைக்கு இராணுவ பாதுகாப்பும் வழங்கப்பட்டுள்ளது.
இந்த தாக்குதல் சம்பவம் மோடடார் சைக்கிளில் பயணித்த இருவரே மேற்கொண்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய சீ.சீ.ரி.வி காணொளிகள் பெறப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.