இந்திய புடவை வியாபாரி விவகாரம். இணுவில், ஏழாலை பகுதிகளை சேர்ந்த 13 போின் இரத்த மாதிரிகள் கொழும்புக்கு..! மத்திய சுகாதார அமைச்சிடமிருந்துவந்த உத்தரவு..
இலங்கை மத்திய சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவின் உத்தரவுக்கமைய யாழ். இணுவில், ஏழாலை பகுதிகளில் தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் 13 பேருடைய இரத்த மாதிரிகள் கொழும்புக்கு அனுப்பபட்டிருக்கின்றது.
மேற்கண்டவாறு கூறியிருக்கும் மாகாண சுகாதாரசேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன், 13 பேருடைய இரத்த மாதிரிகள் பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டிருப்பதாக அவர் கூறினார்.
மேலும் யாழ்ப்பாணத்திலிருந்து தனது சொந்த நாடான இந்தியாவுக்கு திரும்பிய புடவை வியாபாரிக்கு கொரோனா தொற்றுள்ளமையை இந்திய துாதரகம் உறுதிப்படுத்தியிருப்பதாகவும் பணிப்பாளர் மேலும் கூறியுள்ளார்.