சமகால அரசியல் நிலமைகள் வெறுப்பை ஏற்படுத்துகிறது.

ஆசிரியர் - Editor I
சமகால அரசியல் நிலமைகள் வெறுப்பை ஏற்படுத்துகிறது.




இலங்கையில் புதிய ஆட்சியை உருவாக்கும் நோக்கில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் விலைக் கு வாங்கப்படும் நிலை வெறுப்பை உண்டாக்குகிறது. என தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடா ளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கூறியுள்ளார். 


கொழும்பில் உள்ள ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செய்வியிலேயே சுமந்திரன் மேற் கண்டவாறு கூறியிருக்கின்றார். குறித்த ஆங்கில ஊடகத்திற்கு வழங்கிய செய்வியில் மேலும் சுமந்திரன் கூறியிருப்பதாவது, 


உள்ளுராட்சி சபை தேர்தல் முடிவுகளை தொடர்ந்து தெற்கில் குழப்ப நிலை உருவாகியிருக்கி ன்றது. இதனையடுத்து புதிய அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு க் கொண்டிருக்கின்றது.


இந்த விடயம் தொடர்பாக பல்வேறு கலந்துரையாடல்கள் நடக்கின்றது. இவ்வாறான கலந்து ரையாடல்களில் தமிழ்தேசிய கூட்டமைப்பு அங்கம் பெறவில்லை. அவ்வாறான கலந்துரையாட ல்களில் பங்கெடுப்பதற்கு தமிழ்தேசிய கூட்டமைப்புக்கு விருப்பமும் இல்லை. 


இவ்வாறான நிலையில் ஆட்சியமைப்பதற்கான ஆற்றல் எவருக்கு உள்ளது என்பதை அமைதி யாக இருந்து பார்த்து கொண்டிருக்கின்றொம். கட்சி தாவல்களுக்கு பல முயற்சிகள் நடந்து கொண்டிருக்கின்றது. 


அவ்வாறான செயற்பாடுகளில் நாங்கள் ஈடுபட விரும்பவில்லை. நாங்கள் கொள்கை அடிப்ப டையிலேயே முடிவுகளை எடுப்போம். 


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு