இந்திய புடவை வியாபாரி தங்கியிருந்த இணுவில், ஏழாலை பகுதிகளில் தனிமைப்படுத்தப்பட்ட 13 பேருக்கு கொரோனா பரிசோதனை..! இரவு முடிவு வெளியாகும்..
இந்திய புடவை வியாபாரி தங்கியிருந்த இணுவில் மற்றும் ஏழாலை பகுதிகளில் தனிமைப்படுத்தப்பட்ட 13 பேருக்கும் இன்று கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது.
பரிசோதனைகளின் முடிவுகள் இன்று இரவு வெளியாகும் என்று வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆர்.கேதீஸ்வரன் தெரிவித்தார். குறித்த நபருக்கு கொரோனா தொற்று இருப்பதாக நேற்று வெளியான தகவல்
இன்றே உறுதிப்படுத்தப்பட்டது. இதனையடுத்தே தனிமைப்படுத்த பட்டவர்களுக்கான பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. பரிசோதனை முடிவுகளின் படி அடுத்த கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்
என்றும் கேதீஸ்வரன் மேலும் தெரிவித்தார்.