யாழ்.வறணியில் கோவிலுக்குள் புகுந்து கொள்ளை..! சீ.சி.ரீ.வி கமராவில் சிக்கிய கொள்ளைகாரன்..
யாழ்.வறணி தம்பான் கும்பிட்டான்குள பிள்ளையார் கோவிலுக்குள் புகுந்த கொள்ளையர்கள் கலசம் மற்றும் பொருட்களை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
இன்று அதிகாலை கோவிலுக்குள் புகுந்த கொள்ளையர்கள் அங்கிருந்த ஐம்பொன்னால் செய்யப்பட்ட கலசம் மற்றும் 6 லட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்களை கொள்ளையடித்து சென்றிருக்கின்றனர்.
கொள்ளையில் ஈடுபட்டவர்கள் அங்குள்ள சீ.சி.ரீ.வி கமராவில் சிக்கியிருப்பதுடன், விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டிருக்கின்றனர்.