யாழ்.சாவகச்சோியில் புகைரத பாதை சீரமைப்பில் ஈடுபட்டிருந்த இளைஞன் உயிரிழப்பு..!
யாழ்.சாவகச்சோி பகுதியில் புகைரத பாதை சீரமைப்பு பணியில் ஈடுபட்டிருந்த இளைஞர் ஒருவர் திடீரென மயக்கமடைந்து உயிரிழந்திருக்கின்றார்.
இந்த சம்பவம் இன்று மதியம் இடம்பெற்றிருக்கின்றது. ஒப்பந்த அடிப்படையில் புகைரத பாதை சீரமைப்பு பணிகளில் ஈடுபட்டிருந்த குறித்த இளைஞன் திடீரென மயக்கமடைந்துள்ளான்.
இதனையடுத்து மயக்கமடைந்த இளைஞன் அங்கிருந்தவர்களால் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டபோதும்,
சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.