நிறைமதுபோதையில் சாரதி அனுமதி பத்திரமும் இல்லாமல் வாகனம் ஓட்டியவர்களுக்கு யாழ்.நீதிமன்றம் வழங்கிய தண்டனை..!
நிறைபோதையில் சாரதி அனுமதி பத்திரமும் இல்லாமல் வாகனம் ஓட்டிய 3 பேருக்கு யாழ்.நீதிமன்ற நீதிவான் ஏ.பீற்றர் போல் ஒரு மாத சிறைத்தண்டணை வழங்கி உத்தரவிட்டுள்ளார்.
யாழ்.நகரில் சாரதி அனுமதி பத்திரம் இல்லாமல் நிறைமதுபோதையில் வாகனம் ஓட்டிய 3 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர். குறித்த 3 பேரும் இன்று யாழ்.நீதிமன்றில் முற்படுத்தப்பட்டனர்.
இதன்போது 3 பேரும் தமது குற்றத்தை ஒப்புக் கொண்ட நிலையில், மதுபோதையில் வாகனம் ஓட்டியமைக்காக தலா 25 ஆயிரம் ரூபாய் தண்டம் விதித்த நீதிவான், சாரதி அனுமதி பத்திரம் இல்லாமல் வாகனம் ஓட்டியதற்காக
தலா 1 மாதம் சிறைத்தண்டணை வழங்கி தீர்ப்பளித்தார்.