ஒருவகை வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த பெண் உயிரிழப்பு..! மரணதில் சந்தேகம், இரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு, யாழ்.போதனா வைத்தியசாலையில் சம்பவம்..
ஒருவகை காய்ச்சலினால் பாதிக்கப்பட்டிருந்த பெண் உயிரிழந்துள்ள நிலையில், அவருடைய குருதி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டிருக்கின்றது.
யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த யாழ்.வண்ணார்பண்ணை பகுதியை சேர்ந்த திருமதி லிங்கேஸ்வரி சதீஸ்குமார் (வயது40) என்ற பெண்ணே நேற்று உயிரிழந்தார்.
ஒருவகை வைரஸ் காய்ச்சலினால் பாதிக்கப்பட்டிருந்த குறித்த பெண் நுரையீரல், சிறுநீரகம் மற்றும் உடலின் ஏனைய பாகங்கள் செயழிழந்த நிலையில் பெண் மரணமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
எலிக்காய்ச்சல் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் மரணமான பெண்ணின் இரத்த மாதிரிகள் கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இது போன்ற வைரஸ் அறிகுறிகளுடன் யாழ்.போதனா வைத்தியசாலையில் மேலும் சிலர் சிகிச்சை பெற்றுவருவதாவ வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.