யாழ்.கொடிகாமம் பகுதியில் வாள்வெட்டு குழு ரவுடிகள் அட்டகாசம்..! 3 பேர் படுகாயம், மோட்டார் சைக்கிள் தீக்கிரை..

ஆசிரியர் - Editor I
யாழ்.கொடிகாமம் பகுதியில் வாள்வெட்டு குழு ரவுடிகள் அட்டகாசம்..! 3 பேர் படுகாயம், மோட்டார் சைக்கிள் தீக்கிரை..

தென்மராட்சி- கொடிகாமம் வெள்ளாம்போக்கட்டி பகுதியில்  இன்று மாலை 5 மணியளவில் இடம்பெற்ற வாள் வெட்டு தாக்குதலில் மூவர் காயமடைந்துள்ளார். இதன்போது மோட்டார் சைக்கிள் ஒன்றும் வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டோரால் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது. 

சம்பவத்தில் கச்சாய் வீதி கொடிகாமத்தை சேர்ந்த சுரேந்திரன் வெனிஸ்ரன் (19-வயது), வெனிஸ்ரனின் தந்தை வேலுப்பிள்ளை சுரேந்திரன் (53-வயது) மற்றும் வெள்ளாம்போக்கட்டியை சேர்ந்த மகேந்திரன் அஜந்தன் (23-வயது) ஆகியோர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நீதிமன்றம் வரை சென்ற பழைய பகையின் பின்னணியில் இந்த சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் என்று பொலிஸ் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு