மலையக மக்களை கொட்டிவதைக்கும் குளவிகள்..! இன்று 8 பேர் தாக்குதலுக்குள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதி..

ஆசிரியர் - Editor I
மலையக மக்களை கொட்டிவதைக்கும் குளவிகள்..! இன்று 8 பேர் தாக்குதலுக்குள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதி..

டயகம தோட்ட 5ம் பிரிவில் இன்று காலை தோட்ட பகுதியில் வேலையில் ஈடுபட்டிருந்த 8 பேர் குளவிக் கொட்டுக்கு இலக்கான நிலையில் டயகம வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

இவ்வாறு குளவிக்கொட்டுக்கு இலக்காகியவர்களில் 7 பெண்களும் ஒரு ஆணும் அடங்குவர். இவர்கள் இன்று காலை தேயிலை பறித்துக் கொண்டு இருக்கும் போது தேயிலைச் செடியின் அடிப் பாகத்தில் கூடு கட்டப்பட்டு 

இருந்த நிலையில், குளவிக்கூடு கலைந்து, குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளனர். பெருந்தோட்டப் பகுதிகளில் அண்மைக்காலமாக குளவித் தாக்குதல் அதிகரித்து வருவதுடன், உயிரிழப்புக்களும் ஏற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

வடக்கு – கிழக்கு தமிழர் தாயகத்தில் தொடர்ந்தும் கேள்விக்குள்ளாகும் நினைவு கூறும் உரிமை !

மேலும் சங்கதிக்கு