வடக்கின் பல பாகங்களில் இன்று ஞாயிற்றுக்கிழமை மின்சாரம் தடைப்படும் – மின்சாரசபை!

ஆசிரியர் - Admin
வடக்கின் பல பாகங்களில் இன்று ஞாயிற்றுக்கிழமை மின்சாரம் தடைப்படும் – மின்சாரசபை!

உயர் அழுத்த மற்றும் தாழ் அழுத்த மின் விநியோக கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக இன்று காலை 8.30 மணியிலிருந்து மாலை 05.00  மணி வரை, மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபையின் வடமாகாணப் பிரதிப் பொதுமுகாமையாளர் தெரிவித்துள்ளார்.

யாழ். சாவகச்சேரி நகரம், சாவகச்சேரி புகையிரத நிலையம், சாவகச்சேரி தபாலக வீதி, சாவகச்சேரி வைத்தியசாலைப் பிரதேசம், சாவகச்சேரி நீதிமன்றப் பிரதேசம், அரசடி- கச்சாய் வீதி, சங்கத்தானை, மீனாட்சியம்மன் கோவில், பெருங்குளம் சந்தி, 190 ஆவது மைல்கல் ஏ-9 வீதி, நுணாவில் வைரவர் கோவில் பிரதேசம், கல்வயல் துர்க்கை அம்மன் கோவில் சந்தி, வில்லூன்றி, நாவாந்துறை, முத்தமிழ் வீதி, மீனாட்சிபுரம் பண்ணை சுற்றுவட்ட வீதி, கண்ணகிபுரம், பண்ணை சுகாதாரக் கிராமம், யாழ். சிறைச்சாலை, யாழ். பொலிஸ் நிலையம், யாழ். துரையப்பா விளையாட்டரங்கு ஆகிய பகுதிகளிலும் மின்சாரம் தடைப்பட்டிருக்குமென அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு