யாழ்.மாவட்டத்தின் பல பகுதிகளில் நாளை மின்வெட்டு..!

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தின் பல பகுதிகளில் நாளை மின்வெட்டு..!

திருத்த பணிகளுக்காக யாழ்.மாவட்டத்தின் பல பகுதிகளில் நாளை மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என இலங்கை மின்சாரசபையின் வடமாகாண பிரதி பொதுமுகாமையாளர் கூறியிருக்கின்றார். 

இதன்படி, நாளை காலை-08.30 மணி முதல் பிற்பகல்- 05 மணி வரை யாழ்.சுன்னாகம் கொத்தியாவத்தை, கந்தரோடை, ஐயனார் வீதி, டாக்டர் சுப்பிரமணியம் வீதி, சங்கானை, தொட்டிலடி, பண்டத்தரிப்பு ஒரு பகுதி, 

நவாலி சென் பீற்றர்ஸ் தேவாலயம், வேலக்கைப் பிள்ளையார் கோவிலடி, அட்டகிரி, நவாலி, அராலிப் பிரதேசம், செட்டியார் மடச் சந்தி, கரம்பிட்டிப் பிள்ளையார் கோவிலடி, அராலி ஐயனார் கோவிலடி, அராலி கொலனி, 

அராலி சரஸ்வதி பாடசாலை, ஆனைக்கோட்டைப் பிரதேசம், ஆனைக்கோட்டை மூத்த விநாயகர் கோவிலடி, கலையரசி வீதி, குளப்பிட்டி- ஆனைக்கோட்டை வீதி, தமிழ்க்கலவன் பாடசாலைப் பிரதேசம், கொக்குவில் வராகி, 

சாவல்காடுப் பிரதேசம், காக்கைதீவு ஒரு பகுதி ஆகிய பகுதிகளிலும் மின்சாரம் தடைப்பட்டிருக்குமென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு