யாழ்.அச்சுவேலி சுதேச மருந்து உற்பத்தி நிலையத்தில் கடமையாற்றிய பெண் ஊழியர் திடீரென மயங்கி விழுந்து மரணம்..
மாகாண சுதேச மருத்துவ திணைக்களத்தின் யாழ்.அச்சுவேலி சுதேச மருந்து உற்பத்தி பிரிவில் கடமையாற்றி பெண் ஒருவர் அலுவலகத்தில் கடமையில் இருந்தபோது உயிரிழந்துள்ளார்.
இன்று காலை அலுவலக மலசல கூடத்தில் திடீரென மயங்கி விழுந்த குறித்த பெண் ஊழியர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பாக அச்சுவேலி பொலிஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.