யாழ்.மானிப்பாய் பகுதியில் கொடிகட்டி பறந்த சாராய விற்பனை..! 65 வயதான பெண் உட்பட இருவர் கைது..

ஆசிரியர் - Editor I
யாழ்.மானிப்பாய் பகுதியில் கொடிகட்டி பறந்த சாராய விற்பனை..! 65 வயதான பெண் உட்பட இருவர் கைது..

விடுமுறை மற்றும் ஊரடங்கு சட்டம் அமுலில் இருந்த நிலையில் மதுபான விற்பனையில் ஈடுபட்டிருந்த பெண் உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். 

சந்தேக நபர்களிடமிருந்து 180 மில்லி லீற்றர் அளவுடைய 95 மதுபானப் போத்தல்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. யாழ்.மாவட்ட குற்றத்தடுப்புப் பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் 

அங்கு சென்ற உத்தியோகத்தர் இருவர் பணம் கொடுத்து மதுபானத்தை வாங்கிய பின்னர் இந்தக் கைது நடவடிக்கை முன்னெடுத்தனர். அரச விடுமுறை நாளில் 

சட்டத்துக்குப் புறம்பாக மதுபானத்தை விற்பனை செய்த குற்றச்சாட்டில் 65 வயதுடைய பெண் ஒருவரும் 180 மில்லி லீற்றர் அளவுடைய 95 மதுபானப் போத்தல்களை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் 

35 வயதுடைய ஆண் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்கள் இருவரும் மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். 

அவர்கள் இருவரும் விசாரணைகளின் பின்னர் மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்படுவர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு