யாழ்.சாவகச்சோியில் 10 இளைஞர்கள் கைது..! ஊரடங்கை மீறியதாக குற்றச்சாட்டு..
யாழ்.நாவற்குழி பகுதியில் மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்த 10 இளைஞர்கள் சாவகச்சோி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட இளைஞர்கள் பொலிஸ் பிணையில் விடுதலை செய்யப்பட்டிருப்பதுடன், நீதிமன்றில் முன்னிலையாகுமாறும் பணிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது. ஊரடங்கு சட்டம் நடைமுறையில் உள்ள நிலையில் நாவற்குழி பகுதியில் உள்ள மைதானம் ஒன்றில் இளைஞர்கள் விளையாடிக்கொண்டு இருந்த போது ,
பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட 10 இளைஞர்களையும் பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்ற பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்ட பின்னர்
இளைஞர்களை கடுமையாக எச்சரித்து , பொலிஸ் பிணையில் விடுவித்துள்ளனர். அதேவேளை இளைஞர்களை பொலிஸார் கைது செய்ய முற்பட்ட போது இளைஞர்களின் வீடுகள் அருகாமையில் இருந்தமையால்
பெற்றோர்கள் வந்து பிள்ளைகளை மன்னித்து விடும்படி கேட்ட போதும் பொலிஸார் அதற்கு இணங்காமல் அவர்களை பொலிஸ் நிலையம் அழைத்து செல்ல முற்பட்டனர்.
அதனால் அவ்விடத்தில் சிறு பதற்றம் நிலவிய போதிலும், பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரணையின் பின்னர் விடுவிப்போம் என பொலிஸார் உறுதி அளித்ததையடுத்து
பதற்றம் தணிந்தது என அப்பகுதியை சேர்ந்த ஒருவர் தெரிவித்தார்.