தந்தையால் கடத்தப்பட்ட பச்சிளம் குழந்தை மீட்கப்பட்டது..! பொலிஸாருக்கு சவால் விட்டவரை அதிரடியாக கைது செய்த பொலிஸ்..

ஆசிரியர் - Editor I
தந்தையால் கடத்தப்பட்ட பச்சிளம் குழந்தை மீட்கப்பட்டது..! பொலிஸாருக்கு சவால் விட்டவரை அதிரடியாக கைது செய்த பொலிஸ்..

யாழ்.பருத்துறை- அல்வாய் வடக்கு பகுதியில் வீட்டுக்குள் புகுந்து தன்னுடைய சொந்த குழந்தையை கடத்தியதுடன், பொலிஸாருக்கு சவால் விட்டவர் கைது செய்யப்பட்டிருப்பதுடன் கடத்தப்பட்ட குழந்தை பாதுகாப்பாக மீட்கப்பட்டிருக்கிறது. 

நேற்று இரவு 8 மணியளவில் திருட்டுத்தனமாக வீட்டுக்குள் நுழைந்து தன்னுடைய சொந்த குழந்தையையே கடத்தியவர் குழந்தை வேண்டுமானால் சாவகச்சோிக்கு உடமைகளுடன் வருமாறு குழந்தையின் தாயை அச்சுறுத்தியதுடன், 

முடிந்தால் தன்னை கைது செய்யுமாறு பொலிஸாருக்கு சவால் விடுத்திருந்தார். இதனையடுத்து இன்று மாலை குழந்தையின் தாயை சாவகச்சோிக்கு அனுப்பிய பொலிஸார் அங்கு பதுங்கியிருந்து கைது செய்துள்ளனர். 

மேலும் குழந்தையும் மீட்கப்பட்டுள்ளது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு