யாழ்.இணுவில் பகுதியில் விசமிகள் அட்டகாசம்..! ஆட்டோ தீக்கிரை..
யாழ்.இணுவில் பகுதியில் வீடொன்றின் முன்னால் நிறுத்திவைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டி விசமிகளால் தீயிட்டு கொழுத்தப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் நேற்று இரவு இனந்தெரியாத நபர்களினால் தீயிட்டு கொளுத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
இணுவில் பாலாவோடை பகுதியில் உள்ள வீடு ஒன்றில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டி நேற்றிரவு புதன்கிழமை 9 மணியளவில்
இனந்தெரியாத நபர்களினால் தீயிட்டு கொளுத்தப்பட்டுள்ளது.இதனால் முச்சக்கர வண்டி பகுதியளவில் எரிந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.