8ம் திகதி வழமைக்கு திரும்புகிறது புகைரத சேவை..! யாழ்ப்பாணம்- கொழும்பு இடையிலான நகர்சேர் குளிரூட்டப்பட்ட புகைரத சேவை தொடர்ந்தும் முடக்கம்..

ஆசிரியர் - Editor I
8ம் திகதி வழமைக்கு திரும்புகிறது புகைரத சேவை..! யாழ்ப்பாணம்- கொழும்பு இடையிலான நகர்சேர் குளிரூட்டப்பட்ட புகைரத சேவை தொடர்ந்தும் முடக்கம்..

நாடு முழுவதும் இம் மாதம் 8ம் திகதி தொடக்கம் புகைரத சேவைகள் வழமைக்கு திரும்புவதாக புகைரத திணைக்களம் அறிவித்திருக்கின்றது. 

சாதாரண நேர அட்டவணையின் படி தொடருந்து சேவைகள் இடம்பெறும் என்று திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

எனினும் கொழும்பு பதுளை இடையேயான தேனுவாரா மெனிகே தொடருந்து சேவை மற்றும் கொழும்பு – காங்கேசன்துறை இடையிலான 

குளிரூட்டப்பட்ட நகர் சேர் தொடருந்து சேவை ஆகிய இரண்டும் எதிர்வரும் 8ஆம் திகதி இடம்பெறாது என்று ரயில்வே திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. 

நாட்டில் கோரோனா வைரஸ் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த மார்ச் 20ஆம் திகதி தொடக்கம் கொண்டுவரப்பட்ட கட்டுப்பாடுகளையடுத்து 

அன்றைய தினத்திலிருந்து தொடருந்து சேவைகள் இடைநிறுத்தப்பட்டன. எனினும் மட்டுப்படுத்தப்பட்ட சேவைகள் கடந்த மாதம் தொடக்கம் இடம்பெற்றன. 

இந்த நிலையில் ஜூன் 8ஆம் திகதி முதல் பொது போக்குவரத்தை மீண்டும் தொடங்க அரசு முடிவு செய்துள்ள நிலையில், தொடருந்து சேவைகள் 

சாதாரண கால அட்டவணைப்படி இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு