யாழ்.பாசையூர் கடலில் காணாமல்போன இளைஞன் சடலமாக மீட்பு..!

ஆசிரியர் - Editor I
யாழ்.பாசையூர் கடலில் காணாமல்போன இளைஞன் சடலமாக மீட்பு..!

யாழ்.பாசையூர் கடலில் மின்பிடிக்க சென்றிருந்த 27 வயதான இளைஞன் நீரில் மூழ்கி காணாமல்போயிருந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 

சடலமாக மீட்கப்பட்ட இளைஞன் பாசையூர் பகுதியை சேர்ந்த சில்வஸ்ரார் சஜித் என்ற இளைஞனே உயிரிழந்திருக்கின்றான். 

கடற்றொழிலாளர்கள் நான்கு பேருடன் இன்று பூம்புகார் கடலில் மீன்பிடிக்கச் சென்றபோது, குறித்த இளைஞர் காணாமல் போயுள்ளான்.

இதனையடுத்து மீனவர்கள் ஒன்றுகூடி அவரைத் தேடிய போது, பூம்புகார் கடற்பகுதியில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

மீனவர்கள் யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு தகவல் வழங்கிய பின்னர், யாழ்ப்பாணம் பொலிஸார் மற்றும் திடீர் மரண விசாரணை அதிகாரி ந.பிறேம்குமார் 

ஆகியோர் சடலத்தை பார்வையிட்டனர். இந்நிலையில், உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு 

கொண்டு செல்லப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு