படையினரை கண்டதும் தலைதெறிக்க ஓடிய ரவுடிகள்..! ஒரு ரவுடி கைது, பெற்றோல் குண்டுகள், வாள்கள் மீட்பு, யாழ்.தெல்லிப்பழையில் சம்பவம்..

ஆசிரியர் - Editor I
படையினரை கண்டதும் தலைதெறிக்க ஓடிய ரவுடிகள்..! ஒரு ரவுடி கைது, பெற்றோல் குண்டுகள், வாள்கள் மீட்பு, யாழ்.தெல்லிப்பழையில் சம்பவம்..

படையினர் வருவதை கண்டதும் தப்பி ஓடிய இளைஞர்களை துரத்தி சென்ற படையினர் அவர்கள் இருந்த இடத்தில் வாள்கள், பெற்றோல் குண்டுகளை மீட்டிருக்கின்றனர். 

தெல்லிப்பழை பகுதியில் உள்ள மயானம் ஒன்றில் இளைஞர்கள் சிலர் கூடியிருந்த நிலையில் அப்பகுதி ஊடாக படையினர் வருவதை அவதானித்த இளைஞர்கள் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர். 

இதனையடுத்து துரத்தி சென்ற படையினர் ஒருவரை கைது செய்ததுடன், அவர்கள் கூடியிருந்த இடத்தில் பொலித்தீன் பைகளில் கட்டப்பட்ட பெற்றோல், இரு பெற்றோல் குண்டுகள், வாள் மற்றும் சைக்கிள் ஆகியவற்றை மீட்டனர். 

இந்நிலையில் கைது செய்யப்பட்டவரும், பொருட்களும் தெல்லிப்பழை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு