யாழ்.இணுவில் பகுதியில் ரவுடிகளுக்கிடையில் மோதல்..! ஒருவர் காயம்..
யாழ்.இணுவில் காரைக்கால் பகுதியில் இரு ரவுடி கும்பல்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் ஒருவர் காயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இரு ரவுடி குழுக்களுக்கிடையிலும் கடந்த பல நாட்களாக மோதல் இடம்பெற்றுவந்த நிலையில் காரைக்கால் பகுதியில் உள்ள ரவுடி கும்பல் மற்றொரு குழு மீது தாக்குதல் நடத்தியதற்கு
பதில் தாக்குதலாகவே இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது. இதில் இளைஞர் ஒருவர் காயமடைந்துள்ளார்.