15 வயது சிறுமி மீது தொடர் பாலியல் பலாத்காரம்..! பேருந்து நடத்துனருக்கு 30 வருடங்கள் கடூழிய சிறை..

ஆசிரியர் - Editor I
15 வயது சிறுமி மீது தொடர் பாலியல் பலாத்காரம்..! பேருந்து நடத்துனருக்கு 30 வருடங்கள் கடூழிய சிறை..

பாடசாலைக்கு பேருந்தில் பயணித்த 15 வயதான பாடசாலை மாணவி மீது பாலியல் வல்லுறவு புரிந்த பேருந்து நடத்துனருக்கு 30 வருடங்கள் கடூழிய சிறத்தண்டணை விதித்து அனுராதபுரம் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 

15 வயது பாடசாலை மாணவியை திருமணம் செய்வதாக ஏமாற்றி பேருந்துஇ மற்றும் லொட்ஜ்களில் அவரை பல முறை பாலியல் வல்லுறவிற்குள்ளாக்கிய தனியார் பேருந்து நடத்துனர் குற்றவாளியென நீதிமன்றம் அறிவித்தது.

மாணவிக்கு 5 இலட்சம் ரூபா இழப்பீடு வழங்கும்படியும்இ தவறினால் மேலும் 48 மாதங்கள் சிறைத்தண்டனை அனுபவிக்கும்படியும் நீதிபதி உத்தரவிட்டார். ஹொரவப்பொத்தானவிலிருந்து அநுராதபுரத்திற்கு 

சேவையில் ஈடுபட்ட தனியார் பேருந்தில நடத்துனராக பணிபுரிந்த திருமணமான நடத்துனருக்கே இந்த தண்டனை வழங்கப்பட்டது.தான் திருமணமாகாதவர் என்றும்இ மாணவியை காதலிப்பதாகவும் திருமணம் செய்ய விரும்புவதாகவும் 

நடத்துனர் மாணவியிடம் பொய் கூறி ஏமாற்றி பாலியல் வல்லுறவில் ஈடுபட்டிருந்தார். பேருந்திலும் பல்வேறு இடங்களிலும் பல சந்தர்ப்பங்களில் அவர் பிரதிவாதியால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார் என்பதும் 

நீதிமன்றத்தில் தெரியவந்தது.அனுராதபுர போதனா மருத்துவமனையின் நீதித்துறை மருத்துவ அதிகாரி எச்.ஏ. கருணாதிலக உயர்நீதிமன்றத்தில் அளித்த மருத்துவ அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டவர் 

சிறுமியை தீவிரமாக பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிவித்தார். இந்த சம்பவம் குறித்த முதற்கட்ட விசாரணை கஹடகஸ்டிகிலிய பொலிசாரால் நடத்தப்பட்டது. இந்த வழக்கின் ஆரம்ப விசாரணை கஹடகஸ்டிகிலிய சுற்றுலா

நீதிவான் நீதிமன்றத்தில் நடைபெற்றது. பின்னர் இலங்கை தண்டனைச் சட்டம் 364 (2) (இ) மற்றும் 354 பிரிவுகளின் அடிப்படையில் ஏப்ரல் 24இ 2017 அன்று சட்டமா அதிபர் அநுராதபுரம் மேல் நீதிமன்றத்தில்

நடத்துனருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு